Thursday, April 24, 2008

ரெய்நீஸ் ஐயர் தெரு

கல்லூரி இறுதி ஆண்டில்,நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தூத்துக்குடியில் இருந்த விடுதி தோழியான ஜெயந்தியின் வீட்டுக்கு சென்று இருந்தோம்..தூத்துக்குடியில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் அமைந்த ஒரு சிறிய அழகிய கிராமம் அது.அவள் வீடு இருந்த தெருவிற்குள் நுழைந்ததும் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன்..அதன் அமைப்பை பார்த்தும் வண்ணநிலவனின் ரெய்நீஸ் ஐயர் தெரு நினைவில் வந்து மறைந்தது.. வண்ணநிலவனின் மற்றுமொரு அற்புத இலக்கிய படைப்பு ரெய்நீஸ் ஐயர் தெரு.ஆறே வீடுகள் அமைந்த ஒரு அழகிய தெருவின் மாந்தர்களை சுற்றியே இந்த கதை நிகழ்கின்றது.




டாரத்தி, அன்னமேரி, இருதயம், தியோடர், சாம்சன், பிலோமி,ஆசிர்வாதம் பிள்ளை, எபன் என கதை மாந்தர்களின் அன்றாட நிகழ்வுகளும்,அவர்களுக்குள்ளான உறவுகளும் அழகாய் கதை முழுதும் விரவி உள்ளது. மகிழ்ச்சியோ, சோகமோ,காதலோ,குரோதமோ,வன்மமோ எதுவுமே மிகை படுத்த படாமல் அவர் அவர் போக்கில் கதை செல்கிறது..

ரெய்நீஸ் ஐயர் தெருவிற்கும் மழைக்குமான தொடர்பு அற்புதமானது..மழை பெய்து முடித்த ஒரு நாளில் டாரதி தன் வீட்டு வாசலில் அமர்ந்து இருப்பதை தொடங்கும் கதை மழை பெய்து கொண்டு இருக்கும் ஒரு மாலை பொழுதோடு நிறைவுபெறுகிறது.இக்கதையில் கதை மாந்தர்களோடு மழை,பொருட்காட்சி,கால்வாய், வீட்டின் படிக்கல் என யாவும் உயிர் பெற்று உலவுகின்றன.கல்யாணி என ஒரு கதாபாத்திரம்..ரெயநீஸ் ஐயர் தெரு மக்கள் யாவருக்கும் ஒரு உற்ற நண்பன் போல..நிச்சயமாய் சொல்லுவேன் அது வண்ணதாசனை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட பாத்திரம் என்று.அவர்தம் கதைகளை போலவே..அவரது பாத்திர படைப்பும் அருமை...மாலை நேர மழையின் போது பருகும் தேநீர் போல ரசிக்கத்தக்க நாவல் இது..

Thursday, April 17, 2008

கடஷ்ரதா


கடஷ்ரதா ,யு .ஆர். அனந்த மூர்த்தியின் நாவல்.கன்னட எழுத்தாளர் ஆனா இவரின் பல நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது...கடஷ்ரதா என்பதற்கு பொருள் பாரம்பரியம்.இந்நாவல் திக்சா என்னும் பெயரில் ஹிந்தியிலும், கடஷ்ரதாஎன்னும் பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது. தெலுங்கில் இத்திரைப்படம் கிரிஷ் காசர்கோடினால் இயக்கப்பட்டு தங்கத்தாமரை விருந்து பெற்றது..சமீபத்தில் அத்திரைப்படம் கண்டேன். பெரும் புகழும் உள்ள ஒரு பிராமண குருவின் விதவை மகள் அவ்வூரில் உள்ள ஒரு படித்த இளைஞனால் ஏமாற்றபடுகிறாள் .இதனை அறிந்த குரு அவள் இறந்ததாக தன் சமூகத்தினரிடம் அறிவித்து அவளுக்கு காரியம் செய்கிறார்.அதுவரை அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த கோகா,என்னும் தாழ்த்த பட்ட சமுகத்தை சேர்த்த பணியாள் அவர் மீது பெரும் கோபம் கொண்டு சாடுகிறான்.மேலும் அவர் மகளை தன் பொறுப்பில் பார்த்து கொள்வதாக கூகுகிறான்.1930 கதை களம் உள்ளது.அக்காலகட்டத்தில் பிராமணர்களின் மேம்போக்கான பார்வையும்,தாழ்த்தபட்டோரை அவர்கள் நடத்திய முறையும் சிறப்பாய் சித்தரிகபட்டுளது. அனந்தமூர்த்தியின் நாவல்களின் சிறப்பே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன் கதைகளின் மூலம் கொடுக்கும் ஆதரவு.இத்திரைப்படத்தில் நானா படேகரின் நடிப்பு குறிப்பிடத்தக்கது....

Cinema Paradiso


உலக சினிமாக்களில் சிறந்த 50 படங்களை பட்டியலிட்டால் நிச்சயம் இத்திரைப்படம் இடம் பிடிக்கும்.திரைப்பட இயக்குனராய் புகழ் அடைந்த நாயகன்,தன் வாழ்ந்த கிராமத்திற்கு திரும்பு செல்கிறான்.வறுமையின் பிடியில் தாயோடு வசித்து வந்த அவனது பால்ய காலத்தில் அவனுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு அங்கு உள்ள திரைஅரங்கில் படங்கள் பார்ப்பது.திரைஅரங்கில் வேலை பார்க்கும் பெரியவரோடு அவனுக்கு நட்பு தொடங்கி அதுவே பின் அவன் திரைபடங்களை விரும்ப வித்தாய் அமைகிறது. சிறுவனுக்கும்,திரைஅரங்கு ஊழியனுகுமான அந்த உறவு பாசாங்கு இல்லாதது...அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் கவிதை போன்றவை.அவனுக்கு அவர் எடிட்டிங்,ப்ரோஜெக்டிங் ஆகியவற்றை கற்று தருகிறார்.இடையில் நாயகனுக்கு வளர்த்து இளைஞனாகி ஒரு பெண்ணுடன் காதல் கொள்கிறான்.அவளது தந்தை அவளை வேறு ஊருக்கு அழைத்து செல்வதால் அது சோகத்தில் முடிகின்றது...அவள் வேறு ஒருவனை திருமணம் செய்தைதை பின் கிராமத்திற்கு வரும் பொழுது அறிகிறான்.அவளை அங்கு சந்திக்கிறான்..கடந்த கால நினைவுகளை இருவரும் அசைபோடும் அக்காட்சி உணர்வுபூர்வமானது...நாயகன் திரைஅரங்கு ஊழியர் இறந்த செய்தி கேட்டே தன் கிராமத்திற்கு வருகிறான்..காட்சிகள் பின்னோக்கி விரிய படம் தொடங்குகிறது...இத்திரைப்படம் வாழ்வின் சோகம்,காதல்,வெற்றி,இழப்பு என அனைத்தையும் ஒன்று சேர தருகிறது..

Amelie Pouline


Amelie Pouline - ஜீன் என்பவரால் இயக்கப்பட்ட இந்த பிரெஞ்சு மொழி திரைப்படம் பல சர்வதேச விருந்துகளை பெற்றுள்ளது. Amelie என்ற இளம் பெண்ணை சுற்றியே கதை செல்கிறது.தந்தையை விட்டு தனித்து ஒரு நகரில் வாழும் Amelie மதுபான கடை ஒன்றில் பணி பெண்ணாய் இருக்கின்றாள்.தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் ஆசைகளை அவர்கள் அறியாமலே நிறைவேற்றி வைக்கிறாள்.இளவரசி டயானா இறந்த அன்று அவள் அதிர்ச்சியில் கையில் இருந்த பொருளை கீழே விட அதை எடுக்கும் பொழுது ஒரு சிறுவனுக்கு உரிய பெட்டி ஒன்றை பார்க்கிறாள்..அங்கு தொடங்குகிறது அவளது பயணம்.அப்பெட்டியை அச்சிறுவனிடம் கொண்டு குடுப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியே அவளை மேலும் இது போல் செய்ய பணிக்கிறது.அதன் பின் எப்போதும் தன் பணியாளை திட்டி கொண்டிருக்கும் காய்கறி கடைகாரனை அவன் அறியா வண்ணம் சோதனைகுள்ளாகுகிறாள்..அந்த காட்சி அமைப்பு நகைச்சுவை கலந்தது.அவள் இருக்கும் குடியிருப்பில் கணவன் தன்னை விட்டு சென்றதாக கூறி அழுது புலம்பும் பெண்மணியை ஆறுதல் செய்யும் வண்ணம் அவள் கணவன் அனுப்புவது போல் Amelie கடிதம் தயார் செய்து அனுப்புகிறாள்.



தெருவில் நடந்து செலும் ஒரு கண்பார்வை அற்ற ஒரு கிழவனை அருகில் உள்ள மெட்ரோ ஸ்டேஷன்கு செல்ல உதவுகிறாள்.அப்பொழுது அதெருவின் அமைப்பை அவருக்கு அவள் விளக்கும் காட்சிகள் அருமை.உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற அவளின் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவருடைய கிறிஸ்மஸ் தாத்தா பொம்மையை தன் விமான ஊழியை தோழி மூலம் உலகின் பல இடங்களுக்கு எடுத்து சென்று புகைப்படம் எடுத்து தன் தந்தையிடம் காட்டுகிறாள்.தன்னுடன் பணிபுரியும் தோழிக்கு கடை வாடிகையாளனுடன் சிநேகம் வர செய்கிறாள்..இதனிடையில் ஒரு இளைஞனின் போட்டோ ஆல்பம் இவள் கையில் கிடைக்க அவனுடன் கண்ணாமூச்சி விளையாட்டு செய்து காதல் கொள்கிறாள்...படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக பட்ட விதம் அருமை.இயக்குனர் காட்சிகளில் சிகப்பு நிறத்தின் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதாய் படம்பிடித்துள்ளார்.
Amelie ஆகா நடித்த நடிகை Audrey Tautou தன் சிரிப்பால் படம் முழுவதும் ஒரு ரகசிய சிநேகிதி போல் அனைவருக்கும் உதவுகிறாள்.இத்திரைப்படம் ஐந்து அகாடமி விருந்துகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படம் குறித்த தகவல்கள் பெற கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்..

http://en.wikipedia.org/wiki/Am%C3%A9lie